Praveen Kumar: இளம் இசையமைப்பாளர் மரணம்; அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலை 6:30 மணியளவில் உடல் நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார்

இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு பிரவீன் குமார் இசையமைத்திருக்கிறார். மிகச் சிறந்த இசையை வழங்கி வளர்ந்து வந்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

பிரவீன் குமார்

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவரது வயது 28. அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது. தனது இளம் வயதிலே இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.