மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மாட்ரிட்,

களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சபலென்கா 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் சபலென்கா 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினாவை வீழ்த்தினார்.

இதன் மூலம் 1-6, 7-5, 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோத உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.