நள தமயந்தி: `வதந்தியைப் பரப்பாதீர்கள்!' – வைரலாகும் சீரியல் நடிகைகளின் பதிவு

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘நளதமயந்தி’.

இதே சேனலில் ஒளிபரப்பான ‘சீதா ராமன்’ தொடரிலிருந்து விலகிய பிரியங்கா இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ‘நள தமயந்தி’ தொடரின் கதைக்களம் தற்போது வேறொரு டிராக்கில் செல்ல இருப்பதாகவும் இனி ‘தெய்வம் தந்த பூவே’ தொடரில் நடித்திருந்த ஶ்ரீநிதி கதாநாயகியாக தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஶ்ரீநிதி

ஶ்ரீநிதியும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை ஷேர் செய்திருந்தார். அதற்கு அவருடைய நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த தகவல் குறித்து பிரியங்கா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,

‘உங்களுக்கு தேவையானதை அதிகமாகக் கற்பனை செய்யாதீர்கள். அதே போல வதந்திகளை பரப்பாதீர்கள். நான் சீரியலில் இருந்து வெளியேறவில்லை. என்னுடைய அடுத்த ஷெட்டியூலுக்காக காத்திருக்கிறேன்.

ஶ்ரீநிதியின் இன்ஸ்டா ஸ்டோரி

என்ன நடந்தது, என்ன காரணம் என்பதை நீங்கள் அனைவரும் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். நன்றி!’ எனப் பதிவிட்டிருக்கிறார். தற்போது பிரியங்கா அவருடைய பிறந்தநாளை அவர் கணவருடன் கொண்டாடுவதற்காக மலேஷியா சென்றிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.