பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நாளை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்ச் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.