இதற்காக தான் தோனி கடைசியாக பேட்டிங் இறங்கினாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட போது எம்எஸ் தோனி தனது டி20 கரியரில் முதல் முறையாக 9வது இடத்தில் பேட்டிங் செய்தார். ஆனால் ஏன் இவ்வளவு பின்னால் பேட்டிங் இறங்கினார் என்று பலரும் கேள்வி எழுதி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்களும், நிபுணர்களும் ஏன் தோனி முன்னாள் இறங்கிவில்லை என்று கேள்வி எழுப்பினர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் தோனியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தனர்.

அவர் இந்த வரிசையில் பேட் செய்ய விரும்பினால் அவர் அணியில் இருக்க தேவையில்லை என்றும் கூறி இருந்தனர். ஆனால், தோனி கடைசியாக பேட்டிங் செய்வதற்கு காரணம் காயம்தான் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. “தோனி காலில் தசைக் கிழிந்திருப்பதால் மைதானத்தில் அதிக நேரம் ஓடாமல் தவிர்த்து வருகிறார். அதன் காரணமாக ரன்கள் எடுக்க ஓடுவது பிரச்சினையாக இருப்பதால் சீக்கிரமாக பேட்டிங் செய்ய ஆர்வம் காட்டவில்லை” என்று தகவல் வெளியாகி உள்ளது. சில போட்டிகளுக்கு முன்பு டேரில் மிட்செல் பாதிக்கு மேல் ஓடி வந்தும் தோனி ஓடாமல் அவரை திருப்பி அனுப்பினார். இதற்கு காரணமும் காயம் தான் என்று கூறப்படுகிறது.  

MS Dhoni is playing IPL 2024 with a leg muscle tear that is restricting his movements and he can’t run for too long. MS is taking medicines to minimise his pain and run well.

– SALUTE MS… The commitment just for fans is unbelievable….!!! pic.twitter.com/YJosHUME54

— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 7, 2024

So it’s confirmed that his career is gonna end in a few days. My man is playing IPL 2024 with a leg muscle tear just for his fans. No words left for his dedication to the game.
Thank you Dhoni for making us PROUD throughout your career. pic.twitter.com/MZr4DEDCbj

— Abhishek (@MSDianAbhiii) May 7, 2024

மேலும் தற்போது சென்னை அணியில் இன்னொரு விக்கெட் கீப்பராக பேட்டரான டெவோன் கான்வே கிடைத்திருந்தால், தோனி சில போட்டிகளில் விளையாடி இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. தோனி ஒவ்வொரு போட்டியில் ஆடுவதற்கு முன்பும் வலியை குறைக்க மாத்திரங்களை எடுத்து வருகிறார் என்றும், காயத்தை அதிகமாகாமல் பார்த்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு கூட தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சீசன் தொடங்கும் முன்பே டெவோன் கான்வே வெளியேறிய நிலையில், தற்போது காயம் காரணமாக மதீஷ பத்திரனா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். சென்னை அணி பிளே ஆப்க்கு தகுதி பெற போராடி வரும் நிலையில் இந்த காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.