Sai Sudharsan: "சென்னை கூட மட்டும் அடிக்கிறேனா?" – விளக்கும் சாய் சுதர்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி குஜராத்தின் மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 231 ரன்களை எடுத்திருக்கிறது. அந்த அணியின் ஓப்பனர்கள் இருவருமே சிறப்பாக ஆடியிருந்தனர். கில், சாய் சுதர்சன் என இருவருமே சதமடித்திருந்தனர்.

Sai Sudharshan

முரளி விஜய்க்குப் பிறகு ஐ.பி.எல்-இல் சதமடிக்கும் தமிழக வீரர் எனும் பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். 51 பந்துகளில் 103 ரன்களை எடுத்திருந்தார். மேலும், ஐ.பி.எல்-இல் வேகமாக ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்திருக்கிறார். இதற்கு முன் சாய் சுதர்சன் ஐ.பி.எல்-இல் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 96. அதையும் சென்னை அணிக்கு எதிராகத்தான் அடித்திருந்தார். இந்நிலையில், சதமடித்துவிட்டு பேசிய சாய் சுதர்சன் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

சாய் சுதர்சன்

அவர் பேசியவை இங்கே, “என்னுடைய கரியரில் இது ஒரு ஆகச்சிறந்த இன்னிங்ஸ். திட்டங்களை நினைத்தப்படியே சரியாகச் செயல்படுத்தியதில் பெரும் மகிழ்ச்சி. இது பேட்டிங் ஆட உகந்த பிட்ச். அதனால் இந்த பிட்ச்சில் எவ்வளவு ஸ்கோரை அடித்தால் போதும் என என்னால் சொல்ல முடியாது. வேரியேஷன்களை மாற்றி மாற்றி வீசி கொஞ்சம் ஒயிடாகவும் வீச முயல்வது பௌலர்களுக்குச் சிறப்பான ஆப்சனாக இருக்கும். ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்று நின்றுதான் வந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல நன்றாக பேட்டிங்கிற்கு உகந்ததாக மாறியது.

சுப்மன் கில்லின் ஆட்டத்தை நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். சென்னைக்கு எதிராக கூடுதல் சிறப்பாக ஆடுவதாகக் கேட்கிறீர்கள், ஆனால், அது அப்படியில்லை.

நான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன். எனக்கு இது ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸ்!” என சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சனின் சதத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.