திருப்பதி : திருமலை ஏழுமலையானை நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.எனவே ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனம் ரத்து செய்யப்பட்டு, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 90 ஆயிரத்து, 165 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 43 ஆயிரத்து 362 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம், 4.15 கோடி ரூபாய் வசூலானது. டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்.நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 20 அறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
திருப்பதி : திருமலை ஏழுமலையானை நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வரத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.