ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முலகலேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள் ஷர்புனா, பேரன் பைரோஜ் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சுவர் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் … Read more

ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை கொள்ளை: கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது

ஈரோடு: மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளையடித்த வழக்கில் கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கவேல் டாக்டர் வீதியில் விஷ்ணுதீபக் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் உதவியாளர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.  

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

அமராவதி: ஆந்திரா அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் சிலிண்டர் வெடித்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அருகருகே இருந்த வீடுகளும் இடிந்ததில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் முறையை எளிமையாக்கியது தமிழக அரசு

சென்னை: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம்செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன், மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி…. 2,158 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,685 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,50,215 ஆக உயர்ந்தது.* புதிதாக 33 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,166 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,058 கனஅடியிலிருந்து 5,166 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.82 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 90.03 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, லடாக் உட்பட 6 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை

புதுடெல்லி: ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலிஜியம் ேநற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஹ்சானுத்தின் அமானுல்லா பாட்னா உயர் நீதிமன்றத்துக்கும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் கொல்கத்தா … Read more

கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,900 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,700 கன அடியில் இருந்து 1,900 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வரும் கிருஷ்ணா நீர் 526 கன அடியாக உள்ளது.

வாடகைத் தாய் நெறிமுறை சட்டம் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தற்போது வணிக ரீதியாக அதிகரித்து விட்டது. இதனை அடிப்படையாக் கொண்டுதான் கடந்த 2021ம் ஆண்டு, ‘வாடகை தாய் நெறிமுறை சட்டம்- 2021’ உருவாக்கப்பட்டது.* குடும்ப உறவினர் இல்லாத ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு வாடகைத் தாயாக இருப்பதை இந்த சட்டம் தடை செய்கிறது.* கர்ப்ப காலத்தின் போதும் குழந்தைப் பேறுக்கு பிறகும் மொத்தமாக 16 மாதங்கள் வாடகைத் தாய்க்கான காப்பீட்டு பலன்களை தரவேண்டும்.* திருமணமாகி குறைந்தபட்சம் … Read more

கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மும்தாஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். ஆரோட்டுப்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஆனந்த் என்பவர் பலியான நிலையில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். காட்டுயானை தாக்கி உயிரிழந்த மும்தாஜ் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரை மக்கள் சிறைபிடித்துள்ளனர்.