ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறக்கப்படுகிறது. 

கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,01,52,337 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,820 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறையில் சொகுசு வசதி சசிகலா, இளவரசி உட்பட 6 பேர் குற்றவாளியாக சேர்ப்பு

பெங்களூரு:  சொத்து குவிப்பு வழக்கு தண்டனை காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சத்தை சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சசிகலா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதற்கிடைபோலீசார் குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக சிறை அதிகாரி ஆர்.அனிதா, … Read more