இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்…!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. உலக அரங்கில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான தேர்தல், 6 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 19) முதல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேக்கட்டமாக இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற காலை முதலே ஆர்வம் காட்டி உள்ளனர். திரைப்பிரபலங்களும் காலை முதலே ஓட்டளித்து வருகின்றனர். * நடிகர் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி … Read more

இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டா தளத்தில் பயணித்து வருகிறார். இவரின் கணக்கு திடீரென நீக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இசையமைப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‛கோட்' படத்தில் இருந்து ‛விசில் போடு' என்ற பாடல் வெளியானது. 38 மில்லியன் பார்வைகளை இந்தப்பாடல் கடந்தாலும் ரசிகர்களை கவரவில்லை என அனிருத் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர். இதனால் தான் யுவன் இன்ஸ்டாதளம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. திடீரென யுவன் இன்ஸ்டா கணக்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கு … Read more

ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஓட்டளிக்கும் உரிமை என்பது அனைத்து குடிமகனுக்கும் முக்கியமான கடமையாகும். அதனால் 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக ஓட்டளிக்க இருப்பவர்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் … Read more

விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி … Read more

தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சில பிரச்னைகளால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த பின் … Read more

'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா

கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரியில் வெளிவந்த மலையாளப் படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இப்படத்தை நயன்தாரா இப்போதுதான் பார்த்திருக்கிறார். படத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, “சிறந்த படங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது,” எனப் பாராட்டியுள்ளார். தியேட்டர்கள் மூலம் மட்டுமே 130 கோடி வரை வசூலித்துள்ள இப்படத்திற்கு தற்போது ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more

ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா'

கடந்த 2011ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் பழைய படங்களைக் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் 'கில்லி' படம் வருகின்ற ஏப்ரல் 20ம் அன்று வெளியாகிறது. இந்த நிலையில் மங்காத்தா படத்தை மே 1ம் … Read more

மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ‛மிஸ்டர் மனைவி' தொடரில் ஹீரோயினாக கலக்கி வந்தார் ஷபானா. மக்கள் மத்தியில் ஷபானா நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்து வரும் நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் புது அஞ்சலியாக யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வானத்தைப் போல சீரியலில் நடித்த தேப்ஜானி மோடக் தான் அஞ்சலியாக நடிக்கிறார். ஷபானாவுக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் … Read more

அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் திரவியம். தொடர்ந்து ஈரமான ரோஜவே சீசன்-2விலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சீரியலில் அறிமுகாகி நடித்து வரும் திரவியம், தற்போது மீண்டும் தமிழுக்கே வந்துள்ளார். விஜய் டிவியில் புதிதாக தயாராகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸும், வில்லியாக ஆர்த்தி சுபாஷும் நடிக்கின்றனர். இந்த … Read more

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து

'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். 4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா … Read more