நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது . இரு  அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது .இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது . நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது 

டேட்டிங்கில் நபரை நடுநிசியில் கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்… மர்மம் என்ன?

லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (வயது 21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வழியே ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதன்பின்னர் ஹெண்டர்சன் நகரில் உள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என இருவரும் முடிவு செய்தனர்.  இதற்காக இரண்டு பேரும் ஓட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளனர். சம்பவம் நடைபெற்ற நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.  அதனை தொடர்ந்து, … Read more

டெல்லியில் 17-வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சூட்கேசில் சடலமாக கண்டெடுப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் நேற்று இரவு  திடீரென மாயமானான். இதையடுத்து, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதற்கிடையில், இன்று காலை மன்கோல்புரி பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில், சந்தேகத்திற்கிடமான வகையில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.  இதைக் கவனித்த உள்ளூர்வாசிகள் உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்ததும் பதறினர். ஏனெனில், சூட்கேசிற்குள் சிறுவன் ஒருவனது … Read more

தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்- சேவாக் புகழாரம்

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று விலகினார். இதையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது தோனியின் முடிவு அணி நிர்வாகம் தெரிவித்தது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக … Read more

ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ், உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் கொன்றதுடன், ஒன்பது தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 டாங்கிகள், 20 கவச வாகனங்கள், 9 பீரங்கி அமைப்புகள், 3 … Read more

பரம்வீர் சிங் வழக்கு – சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, மராட்டிய  மாநில முன்னாள் உள்துறை  மந்திரி அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மராட்டிய போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. உண்மை வெளிவருவது முக்கியம், ஆனால் பரம்வீர் சிங்கும், முன்னாள் உள்துறை மந்திரியும் ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டன … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்…!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் … Read more

சுவிட்சர்லாந்தில் பதுங்கிய புதினின் ரகசிய காதலி… வெளியேற்ற வலுக்கும் கோரிக்கை

ஜெனீவா, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38).  இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது.  புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது.  எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை. புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் … Read more

எரிபொருள் விலையேற்றத்துக்கு என்ன காரணம்? மத்திய மந்திரி விளக்கம்

புதுடெல்லி, நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.  இந்தநிலையில்,  நாடளுமன்ற மக்களவையில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே ஆகும். எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான … Read more

லாகூர் டெஸ்ட் : கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 278 ரன்கள் தேவை

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more