கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

ஒட்டாவா, கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி … Read more

மராட்டிய சட்டசபையில் மார்ச் 11-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

மும்பை, மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இதில் மார்ச் 11-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  மார்ச் 25-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதல்-மந்திரி … Read more

பெண்கள் உலக கோப்பை: சாம்பியம் பட்டம் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி தெரியுமா..?

துபாய்,  12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.  போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.26½ கோடியாகும். இது முந்தைய உலககோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை விட 75 சதவீதம் கூடுதலாகும். சாம்பியன் கோப்பையை வெல்லும் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33.84 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின   இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் மோகன் பகான் அணியின் மண்விர் சிங்க் 3 வது நிமிடத்தில் ,மற்றும் 46  வது நிமிடத்தில் கோல் அடித்தார் .இதற்கு … Read more

பிரான்சில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

பாரீஸ்,  தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று சற்று குறைவாக பதிவாகி வருகிறது. இதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், … Read more

பீகாரில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு

பாட்னா,  சாயத்துக்காக அவுரிச்செடியை கட்டாயமாக பயிரிட உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார். அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் அன்றைய இரவு மதரீதியிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் … Read more

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை ஸ்கேட்டிங் போட்டியில் முன்னிலை!

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றார். அவர் 2 நிமிடம் 40 வினாடிகள் ஸ்கேட்டிங் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார். முன்னதாக அவர் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் 90.45 புள்ளிகள் பெற்றிருந்தார். இந்நிலையில், இம்முறை ஒலிம்பிக்கில் அவர் அதை விட குறைவாக 82.16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமையன்று … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம்..! – ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்,  முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் … Read more