வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவை: தமிழகம் உட்பட 100 இடங்களில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். வேளாண் பணிகளில் நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏர்ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இவை தமிழகம் உட்படநாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் … Read more

ரஷ்யா – பெலாரஸ் இணைந்து கூட்டு போர் பயிற்சி; உக்ரைன் அருகே தயார் நிலையில் ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

உக்ரைன் எல்லையில் படையைக் குறைத்துள்ளதாக ரஷ்யா கூறிய நிலையில், அந்நாட்டு போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பெலாரஸுடன் இணைந்து கூட்டுபோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் பக்கத்து நாடானஉக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. … Read more

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல Source link

பஞ்சாபில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்: உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

பஞ்சாபில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாபில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. … Read more

லாகூரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட மூவர் பலி

பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரின் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளனர். லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூர். வணிக நகரமான இங்கு பல சந்தைகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இங்கு வருவதுண்டு. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வால்ட் சிட்டிக்கு அருகில் … Read more

அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு: சென்னையில் குறைவாக பதிவான வாக்குகள்- 268 மையங்களில் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு … Read more

லக்கேஜ்ஜை ஒப்படைப்பதில் அலட்சியம்: ஸ்பைஸ்ஜெட் விமான பயணிக்கு ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவு

ஹைதராபாத்:கன்ஷாம் தாஸ் பஜாஜ் என்ற 75 வயது முதியவர், கடந்த 2019 ஆகஸ்ட் 14 அன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஹைதரா பாத்திலிருந்து பெங்களூருக்கு சென்றார். அங்கு அவருடைய லக்கேஜ்ஜுக்காக காத்திருந்தார். ஆனால் அவருடைய லக்கேஜ் வரவில்லை. ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்த போது, அவருடைய லக்கேஜ்ஜில் பவர் பேங்க் இருந்ததால், விமானத்தில் ஏற்றப்படவில்லை என்றும், அவர் அனுமதிக் கடிதம் வழங்கினால், அவருடைய லக்கேஜ்ஜை திறந்து அதிலிருந்து பவர்பேங்க்கை எடுத்துவிட்டு, லக்கேஜ்ஜை மறுநாள் காலை ஹைதராபாத்திலிருந்து … Read more

அமெரிக்காவில் 5-ஜி அறிமுகம் செய்ததால் ரத்து செய்யப்பட்ட விமான சேவையை தொடர ஏர் இந்தியாவுக்கு போயிங் அனுமதி

சிகாகோ: அமெரிக்காவில் நேற்று முன்தினம்5-ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டது. இதனால் விமானங்களின் மின்னணு செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் போயிங் விமானங்களை ரத்து செய்யுமாறு போயிங் நிறுவனம் அறிவுறுத்தியது. போயிங் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் 8 விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்திருந்தது. உரிய சோதனைகளுக்குப் பிறகு மின்னணு பாதிப்பு ஏற்படாதுஎன்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சேவைகளைத் தொடருமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நியூயார்க் நகருக்கு விமான சேவையைஏர் இந்தியா … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நீலகிரியில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிக வாக்குப்பதிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்களை விட ஆண் அதிக அளவில் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பத்தற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் … Read more

உலகின் சிறந்த 30 சுற்றுலா தலங்களில் கேரள கிராமம்: அருந்ததி ராயின் புக்கர் பரிசு வென்ற நாவலால் கிடைத்த அங்கீகாரம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997-ம் ஆண்டு ‘த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இது அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது. இந்தியாவில் இருந்து புக்கர் பரிசுபெற்ற … Read more