நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை  நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்கு, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்…

பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே  கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்களைத் தொடர்ந்து இன்று மாலை 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  முதல்நாளில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு … Read more

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய ஆலோசனை….

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பளிங்கென் இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகத் துறை இணைச் செயலாளர் கரைன் ஜீன் பியர்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். ஜீன் பியர்ரி இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குவாட் அமைப்பு சார்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் … Read more

பாரதிய ஜனதாவின் சின்ன வீடு அண்ணா திமுக : காங்கிரஸ் தலைவர் கிண்டல்

ஈரோடு கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவின் சின்ன வீடாக அதிமுக இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “எடப்பாடி பழனிச்சாமி கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பது விசாரணைக்குப் பிறகு முழுமையாக வெளிவரும்.  எனவே நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிசாமி இருக்கப்போகிறார். நான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினை சொல்லியுள்ளேன்.  தேர்தலில் … Read more

லாலு மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றத்தை அணுக உள்ள தேஜஸ்வி

பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.   பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்,  கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது. அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார்.   இது தவிர லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அந்த தோரந்தா … Read more

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.  இங்கு பிச்சுமணி துணை வேந்தராக உள்ளார்.  இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்று வரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு  புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.  இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் … Read more

தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப்  பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்குப் பிறந்த மகளைத் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார் அந்த மாணவி பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்துள்ளார்.  அவர் இந்த … Read more

போனி கபூர் கம்பெனிக்காக மேலும் ஒரு படத்திற்கு அஜித் ஒப்பந்தம்

AK61 – அஜித் குமாரின் 61 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போனி கபூர் AK61 படப்பிடிப்பிற்கு ஆயத்தமாவதாக குறிப்பிட்டுள்ளார். Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK — Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022 ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை … Read more

விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து அரியானாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். பஞ்சாபி மொழி படங்களில் நடித்த நடிகர் தீப் சித்து, இன்று இரவு ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில் இறந்ததாக சோனேபத் போலீசார் உறுதிப்படுத்தினார். குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில் பயணம் செய்த மூன்று பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு … Read more

தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 15/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,34,77,508 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,325பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,946 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,894 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,69,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more