உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்படவுள்ளது. கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த … Read more

அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளை யாழ் மாவட்டத்தில் இன்று திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று (18) திறக்கப்படவுள்ளது. இது அரச வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளையாகும். இதனூடாக பாடசாலை மாணவர்கள், உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அரச ஊழியர்கள் அடங்கலாக தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் அனைத்து வெளியீடுகளையும் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க … Read more

இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின்,வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளைமாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், … Read more

கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில … Read more

பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  தம்மிக்க தஸநாயக தெரிவித்தார். இதற்கமைய பெப்ரவரி 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை … Read more

பிராந்திய விடயங்கள் தொடர்பாக பிராந்திய விடயங்கள் தொடர்பாக ஆராய்வு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று (பெப்ரவரி 17) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலி தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக் குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர … Read more

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு நேற்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே கௌரவ தபிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் … Read more

கொவிட் நோயாளர்கள் வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான மருந்தை பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மருந்து வகைகளை எடுக்கும் போது அவர்களுக்குள்ள  நோய் அறிகுறிகளுக்கு  மாத்திரம் மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. வைத்திய சிபாரிசு இன்றி மீள்சக்திக்கான எந்த மருந்து வகைகளையும் எடுக்க வேண்டாம் என்று இயன் மருத்துவர் (physiotherapist) விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று மாலை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

வட மாகாணத்தில் மலேரியா தொற்று பரவும் அபாயம்

வட மாகாணத்தில் தற்பொழுது  மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு  வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார். இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், … Read more