இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் உணவுகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவு முறையான தரத்தில் இல்லாமையினால் அதிகளவானோர் தொற்றாத நோய்களுக்கு உள்ளாவதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார். உணவுக்கு உரிய தர நிர்ணயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் நிலந்த லியனகே இதனை குறி்பபிட்டுள்ளார். உணவில் நச்சுப் பொருள் “இலங்கையில் பெரும்பாலும் இந்த தொற்றாத நோய்களைப் பற்றிப் பேசும்போது உணவுதான் முதன்மையானது.உணவினால் ஏற்படும் … Read more

ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்! இலங்கையின் அரசியல் தலைமையை ஆட்டிப்படைக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றி, அக்டோபர் 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன. அரசியல் தலைமை வெளிவரும் விடயங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்கால தீர்மானம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறித்த தீர்மானம் செல்லுபடியாகும் என்பதால், … Read more

இலங்கையின் மோசமான நிலைக்கான பிரதான நபர்களை அம்பலப்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையிலுள்ள தொழில் வல்லுநர்கள் முறையான முறையில் வரி செலுத்தியிருந்தால், இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவிடப்படுகிறது.  ஆனால், ஒரு வைத்தியர் தனது தொழிலில் குறைவான வரியை செலுத்துவதாகவும் … Read more

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள்: உள்ளூர் வர்த்தகர்கள் விசனம்

உள்ளூர் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொள்கலன்களில் உணவுப் பொருட்கள்,அழகுசாதனப் பொருட்கள், விழாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கை மாலைகள் ,மஞ்சள் மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வர்த்தகர்கள் விசனம் இந்தநிலையில் பொருட்கள் கப்பலில் இருந்து இறக்கப்படாமையால், கோயில் விழாக்களின் போது, தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்கை மாலை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கொள்கலன்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளின் … Read more

கொழும்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து (Live)

கொழும்பு -தொட்லாங்க கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.  தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுமக்கள்  தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  அத்துடன் காற்று காரணமான தீ வேகமாக அங்குள்ள ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இந்நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் … Read more

அதிகரிக்கும் அழுத்தம் – வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற தயாராகும் அரசாங்கம்

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது அல்லது மீள்திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன்படி, பல பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாற்றுத் திட்டம் அறிமுகம் உயர்பாதுகாப்பு வலயங்களால் வர்த்தகம் பாதிக்கப்படலாம் … Read more

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற பெருந்தொகை கடன்: விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம் மட்டுமே மேலும் தெரிவிக்கையில்,“கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு இடத்தில் … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம் – இலங்கை தமிழர்களின் திகில் அனுபவம்

உக்ரைன் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்களும் ரஷ்யப் படைகளின் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களில் திலுஜன் பத்தினஜகனும் ஒருவர். இந்நிலையில், திலுஜன் பத்தினஜகன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் உயிருடன் வெளியே வரமாட்டோம் என்று நினைத்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த போது தான் வசித்து வந்த வடகிழக்கு உக்ரைனில் உள்ள குப்ன்ஸ்கில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள கிர்கிவ் … Read more

சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live)

நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை “தேசியப் பேரவையை” ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது. பார்வையாளர் கூடம் திறப்பு இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் … Read more

கடும் நிதி நெருக்கடி – முடங்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்

நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான எழுதுபொருட்களை பெற்றுக்கொள்வது, அத்தியாவசிய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இருபதாயிரம் கோடிக்கு மேல்  நிலுவைத் தொகை அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட … Read more