கோட்டாபயவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

மிரிஹானவில் இடம்பெற்ற மோதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார். தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் நினைக்கவில்லை என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். வன்முறை குழுக்கள் எதுவும் நுழைந்து வன்முறையில் செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனினும் தீவிரவாதிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்பது எங்களுக்கு தெரியும். அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

கண்காட்சியை ஆரம்பித்து வைக்க சென்ற ஷிரந்தி ராஜபக்ச: நுவரெலியா மக்கள் கொடுத்த பதிலடி

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபகச அங்கு சென்றிருந்தார். இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர். இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம்!

சுகாதார அமைச்சுக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவச்சிகள் மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார ஊழியர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. Source … Read more

மீரிஹான போராட்ட பதற்றம் தணியும் முன்னர் மற்றும் ஒரு முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு!

நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.  சீமெந்து விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

கடும் அச்சத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் ஆஸ்தான ஜோதிடர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறிய போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய பதற்றத்தின் போது ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதியை அழைத்த ஞானக்கா உடனடியாக தற்போது உள்ள பாதுகாப்பை விடவும் அதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். காளி அம்மனின் சக்தி உள்ளதாக கூறி மக்களை ஏமாற்றும் ஞானக்காகவுக்கு ஜனாதிபதி … Read more

பங்குச் சந்தை வர்த்தகத்தை இரண்டு மணி நேரமாக மட்டுப்படுத்த முடிவு!

தினசரி வர்த்தக நேரத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று (31) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்திற்கு திறந்திருந்ததுடன், இன்று (01) தினசரி வர்த்தக காலம் 2 மணிநேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குச் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெற்றுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவு, களனி மற்றும் கல்கிலை பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  … Read more

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் … Read more

வெடித்தது போராட்டம்! – முக்கிய அமைச்சர் ஒருவரின் வீடும் முற்றுகை?

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல … Read more

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு (Photos)

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது. தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நுகேகொடவிலுள்ளவர்களும் மிரிஹான பகுதிக்கு செல்லப்போவதாக தெரிவித்த வண்ணமுள்ளனர். மிரிஹான – … Read more