"கமலும் நானும் கட்டிப்புரண்டு சண்டை போட்டோம்!"- `மூன்றாம் பிறை' நினைவுகள் பகிரும் கே.நட்ராஜ்

டபாலுமகேந்திரா- கமல் கூட்டணியில் வெளியினா ‘மூன்றாம் பிறை’ இன்று நாற்பாதாண்டு கொண்டாடுகிறது. அதில் கே.நட்ராஜும் கொல்லன் பட்டறையில் வேலை செய்பவராக நடித்திருப்பார். ரஜினியின் நெருங்கிய நண்பர். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘வள்ளி’ படங்களின் இயக்குநர் இவர். ஒரு காலத்தில் வில்லன் நடிகர்.. இப்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் கே.நட்ராஜிடம் பேசினேன். ”இப்பத்தான் நடிச்சது மாதிரி இருக்கு. நாற்பது வருஷம் ஆகிடுச்சுனு நினைக்குறப்ப, காலம் எவ்ளோ வேகமா ஓடுதுனு நினைக்க வச்சிடுச்சு. சத்யா மூவீஸோட ‘ராணுவ வீரன்’ல நடிச்சிட்டு இருந்தேன். … Read more

ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். மேகபதி கவுதம் ரெட்டிக்கு திடீரென நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி துபாயில் இருந்து அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மேகபதி … Read more

Ind vs WI: பூரனுக்கு மூன்றாவது அரைசதம், இந்தியாவிற்கு மூன்றாவது வெற்றி!

மூன்றாவது டி20 போட்டியையும் வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை வழி அனுப்பியிருக்கிறது இந்திய அணி. முந்தைய போட்டிக்கும் இப்போட்டிக்கும் அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை. மிடில் ஓவர்களில் குறைந்த ரன் ரேட்டினை சென்ற ஆட்டத்தில் பன்ட்டும் வெங்கடேஷும் சரி செய்ததுபோல இம்முறை சூர்யகுமாரும் வெங்கடேஷும் சரி செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளின் தொடக்க பேட்டர்கள் வழக்கம்போல சொதப்ப இப்போட்டியிலும் அரைசதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் பூரன். இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது … Read more

`பிராய்லர் கோழி புரட்சி'க்கு காரணமான அமெரிக்க பெண்மணி; ஒற்றை பூஜ்யத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

இன்று சிக்கன் என்றழைக்கப்படும் பிராய்லர் கோழி இறைச்சி நீக்கமற எல்லா ஊர்களிலும் இருக்கிறது. குக்கிராமங்களிலும் கறிக்கோழிக் கடைகளைக் காண முடிகிறது. நகரங்களில் கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், பிரியாணி, பெப்பர் சிக்கன் என்று பல வடிவங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்தக் கறிக்கோழி இறைச்சி மூலம் பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் ஒரு பெண்மணி என்றால் … Read more

இன்றைய ராசி பலன் | 21/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

கள்ள வாக்கு விவகாரம்: சட்டையைக் கழற்றி இழுத்துச் சென்ற ஜெயக்குமார் – சர்ச்சையும், விளக்கமும்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, நபர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று வரிசையில் நின்று தங்கள் … Read more

தேர்தல்: ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வாக்களித்த மூதாட்டி இன்று மரணம்! – நாமக்கல்லில் சோகம்

உடம்பு முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, நேற்று வாக்களிக்க வைத்தனர். இந்த நிலையில், அந்த மூதாட்டி இன்று இயற்கை எய்தியிருப்பது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாமக்கல் நகராட்சில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மனைவி, லட்சுமி. 75 வயதான அந்த மூதாட்டிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட, வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று … Read more

ரூ.6 லட்சம், ஆடம்பர ஐபோன்; 500 கி.மீ பயணம்; வீட்டைவிட்டு சென்ற 15 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனும், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். இது தொடர்பாக 15 வயது சிறுவனின் தந்தை தன் மகன் கடத்தப்பட்டு விட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தேடிவந்தனர். இரண்டு பேரில் 17 வயது சிறுவனிடம் மொபைல் போன் இருந்தது. அதோடு 15 வயது சிறுவன் காணாமல் … Read more