தவறான செயலில் ஈடுபட்ட பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் … Read more

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் (Sapphire Day) குறித்து கௌரவ பிரதமருக்கு விளக்கம்

துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (22) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர். இலங்கையின் நீல இரத்தினக்கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீல இரத்தினக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். அதற்கமைய பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் … Read more

இலங்கையின் இரத்தினங்கள் துபாய் கண்காட்சியில்

துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள  எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று  அலரி மாளிகையில் சந்தித்தனர். இலங்கையின் நீல கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீலக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். அதன்படி, முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேருக்கு சொந்தமான … Read more

3 வாரங்களில் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் அதிகரிப்பு

கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு, வைரஸ் காய்ச்சல், டெங்குப் பரவல் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக அதிகரிப்பு பரசிற்றமோலுக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். கடந்த 3 வாரங்களில் நாட்டின் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் உயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர் ,பரசிற்றமோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யும் நிறுவனம் அவற்றை இறக்குமதி செய்ய பின்வாங்குவதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறினார்.

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி – கனவாக மாறிய ஆசைகள்

பாரிஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தம்பதி ஒன்று கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி குறித்த தம்பதி உட்பட 6 பேர் பாரிஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொள்ளும் திகதியாக கடந்த 27ஆம் திகதியை தெரிவு செய்திருந்தரனர். அதற்கேற்ப அனைத்த நடவடிக்கைகளையும் நிறைவு செய்துவிட்டு பிரான்ஸ் திரும்புவதற்காக PCR பரிசோதனை செய்த போது குறித்த தம்பதிக்கு கொரோனா தொற்று … Read more

இயற்கைப் பசளை உற்பத்தியை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் – 2022 ,மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இன்று 22.02.2022 திகதி காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலின்போது மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வங்கிகள் ஊடாக குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை அரசு வங்கிகளின் ஊடாக பெற்றுக்கொடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நீர்ப்பாசனம் தொடர்பாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள், … Read more

டீசலின்றி நடுவீதியில் நின்ற பேருந்து! மக்கள் பெருந் தவிப்பு

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று டீசல் இன்றி வீதியில் நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை களுத்துறை நகர மையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மாத்தறை இலங்கை பேருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து களுத்துறை வீதியில் காலை 9 மணியளவில் நின்றுள்ளது. அப்போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்ததால் அவர்கள் வேறு … Read more

இலங்கை, இந்திய அணிகள் : முதலாவது டி 20 போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது டி 20 போட்டி நாளை (24) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுற்றுலா   இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ரி 20 போட்டி மற்றும்  இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி 20 போட்டி நாளை 24 ஆம் திகதியும், இரண்டாவது ரி 20 போட்டி 25 ஆம் திகதியும், மூன்றாவது ரி 20 போட்டி 27 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதேவேளை முதலாவது டெஸ்ட் … Read more

இலங்கையில் கோவிட் வைரஸால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்ட அனைவரின் மரணத்திற்கும் கோவிட் தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.   நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டார்.  தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,  கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதல் நாட்பட்ட நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் … Read more

காத்தான்குடியில் குறுந்திரைப்பட பிற்சிப்பட்டறை செயலமர்வு

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்;பட்ட கலை ஆர்வலர்களுக்கு குறுந்திரைப்பட பயிற்சிப்பட்டறை நேற்று (22) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பயிற்சிப்பட்டறையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கலா மண்றங்கள்இ பாடசாலை மாணவர்கள்இ இளம் கலைஞர்கள் உட்பட சுமார் 40 பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.   கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் … Read more