மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்தது – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன

• நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடலும் இன்றி கடன் மீள செலுத்துவதை கைவிட்டனர் – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் • நிதி வங்குரோத்து நிலையை அறிவித்தமை, நீண்ட … Read more

மூன்றாம் போக சிறுதானிய விதைப்பில் தாம் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற்றுள்ளதாக பாவற்குள விவசாயிகள் மகிழ்ச்சி.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயளாலர் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் யுனிட் 4,5,6 ​பகுதியில் மூன்றாவது போகமாக விதைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருக்கும் விளைநிலங்களை மாவட்ட செயலாளர் இன்று பார்வையிட்டார் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 45 விவசாயிகள் இணைந்து உளுந்து, கௌப்பி, பயறு போன்ற சிறுதானியங்களை பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெற்றுள்ளனர். குறித்த போகத்திற்கு தேவையான நீரை தாம் செட்டிக்குளம் பெரிய நீர்ப்பாசன திணைக்கள அனுசரணையின் கீழ் பெற்றுக் கொண்டதாகவும் தகுந்த காலத்திற்கு கிடைத்த அறிவுரை மற்றும் சரியான காலஇடைவெளியில் … Read more

அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்

அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் அமைப்புக்கள் மத்தியில் தெரிவிப்பு • அங்கவீனமானவர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை – துறைசார் மேற்பார்வைக்குழுவில் பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் … Read more

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென்; மாகாணங்களில், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் … Read more

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடரையொட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றார். ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி: நடவடிக்கை மற்றும் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சீனாவின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் தலைமையில் நடைபெற்றது. உலக அபிவிருத்திக் கூட்டாண்மைகளுக்கு புத்துயிரளிப்பதன் மூலமும், வலுவான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான … Read more

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு

வலயத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற இலங்கைக்கு உதவ மலேசியா தயார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு (20) நியூயோர்க்கில் நடைபெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த பிரதமர் அன்வர் … Read more

2023 அரச சேவை கிரிக்கெட் போட்டி 25 ஆம் திகதி ஆரம்பமாகும்;

இலங்கை அரச சேவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள, 2023ஆம் ஆண்டுக்கான அரச சேவை கடின பந்து கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரச சேவை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கமல் புஷ;பகுமார தெரிவித்தார். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (21) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரச சேவை கிரிக்கெட் … Read more

பிரதமரின் தொடர் ஒத்துழைப்பு, இலங்கை -ஈரான் இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவியளித்தன – ஈரான் தூதுவர்

இலங்கையின் தூதுவராக தனது சேவைக் காலம் முடிவடைந்து செல்லும் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசதே “ஈரான் – இலங்கை இரு தரப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இராஜதந்திர பதவிக் காலத்தில் தொடர் ஒத்துழைப்பை வழங்கியமை” தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார். கொரோனா தொற்று மற்றும் உலக பொருளாதார நெருக்கடியில் சவால் மிக்க காலப்பகுதியில் வெளிநாட்டமைச்சராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் வழங்கிய ஒத்துழைப்புக்களை பாராட்டும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற போது பிரதமரை சந்தித்த தூதுவர் … Read more

இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பல்வேறு துறைசார் உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம். கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவொன்றை விரைவில் நிறுவுமாறு ஈரான் ஜனாதிபதி பரிந்துரை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் (Seyyed Ebrahim Raisi) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல … Read more

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கு நிதியளித்தல் தொடர்பான மாநாட்டிலியே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை அடிப்படையாக கொண்டு, காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய உலக பொருளாதாரத்திற்கான நியாயமானதும் துரிதமானதுமான மாற்றத்திற்காக உலகளாவிய கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான மைல்கல்லாக ஐ.நா பொதுச்செயலாளரால் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. விரைவில் அமுல்படுத்தப்படக்கூடிய … Read more