டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more

“வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் “பொதுஜன பேரணி” ஆரம்பம்… “மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் … Read more

அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் (Video)

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து … Read more

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட வழிப்புனர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சிரமதான நடவடிக்கை … Read more

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுமா? வெளியானது அறிவிப்பு

கோவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது. இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Source link

மட்டக்களப்பில் தடுப்பூசி அட்டை: பாதுகாப்பு பிரிவினரால் பல இடங்களிலும் பரிசோதனை

மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை ,பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும் ,தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை ,பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் … Read more

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பேயில்லை! உறுதியான தகவல் வெளியானது

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். Source link

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்  போட்டி – முழு அனுமதி சீட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை

45 போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகள் 5 நிமிட காலபகுதிக்குள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வருட மத்திய காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான அனுமதி சீட்டுகளை ஒதுக்கி கொள்வதற்கு வசதியாக ஆரம்பிக்கப்பட்ட விற்பனையின் போது அனைத்து டிக்கெட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த போட்டிகளில் தொடர்புப்பட்ட 45 போட்டிகளுக்கான 2 இலட்சத்திற்கும் … Read more

கொழும்பில் வீதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருச்து 4 தங்க சங்கிலிகள் மற்றும் தங்க பென்டன்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் 29 … Read more

இன்று சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (09) நாட்டில் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று (09) மாலை 4.00 மணி தொடக்கம் நாளை (10) 6.00 மணி வரையிலான 14 மணித்தியாலய காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. கட்டுநாயக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், கட்டான (தெற்கு), சீதுவ, உடுகம்பொலவில் ஒரு பகுதி, மினுவாங்கொடையில் ஒரு பகுதியில், கட்டுநாயக்க விமானப்படை முகாம், ஏகல, கொடுகொட, உதம்மிட, ரஜ … Read more