இன்று சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (09) நாட்டில் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இன்று (09) மாலை 4.00 மணி தொடக்கம் நாளை (10) 6.00 மணி வரையிலான 14 மணித்தியாலய காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கட்டுநாயக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், கட்டான (தெற்கு), சீதுவ, உடுகம்பொலவில் ஒரு பகுதி, மினுவாங்கொடையில் ஒரு பகுதியில், கட்டுநாயக்க விமானப்படை முகாம், ஏகல, கொடுகொட, உதம்மிட, ரஜ மாவத்த, நீர்கொழும்பு வீதி (துடெல்ல தொடக்கம் 20 மைல் வரை) வஹடியாகம மற்றும் தெலதுர ஆகிய பகுதிகளுக்களுக்கான நீர் விநியோகமே இவ்வாறு இடை நிறுத்தப்படுகின்றன.

ஜா- எல நீர் விநியோக குழாய் கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளமையினால் நீர்விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.