‘‘2019-ல் பெற்ற வெற்றியை பாஜக இம்முறை பெறாது’’ – சசி தரூர்

திருவனந்தபுரம்: கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜக இம்முறை பெறாது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரம் தொகுதியின் எம்பியான சசி தரூர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “நாட்டின் ஜனநாயகத்தை கடத்திச் செல்ல பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதற்கு … Read more

ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Enforcement Directorate: கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

கேஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்க கருத்துக்கு எதிர்ப்பு – தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு சம்மன் அனுப்பி அழைத்து பேசியுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் நடந்து வரும் சில சட்டபூர்வ நடவடிக்கை தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இரு நாடுகளின் தூதரக ரீதியிலான உறவுகளில் … Read more

ED காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்தது.. ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு

Arvind Kejriwal Health: டெல்லி முதல்வர் அரவிந்த் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

என்ஐஏ, என்டிஆர்எஃப் உள்ளிட்ட முக்கிய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் அதிரடி மாற்றம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும்நியமித்துள்ளது. முன்னதாக இந்த நியமனங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த நியமனங்கள் பற்றிய அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது. 1989 உத்தரப்பிரதேச பிரிவு ஐபிஎஸ் (IPS) அதிகாரியான … Read more

சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

VK Saxena Vs Arvind Kejriwal: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. “சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது” எனக் கூறியிருப்பது டெல்லி அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.

சத்தீஸ்கர் | பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சல்கள் உயிரிழப்பு

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் இன்று (புதன்கிழமை) பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர், பலர் காயமடைந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல்துறை ஐஜி சுந்தரராஜ் கூறுகையில், “பசகுடா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பகா கிராமங்களின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது” என்றார். மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஜிஆர்), மத்திய பாதுகாப்புப் படை, … Read more

பாஜக வேட்பாளர் பட்டியலில் வருண் காந்தி உட்பட 37 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது பட்டியலை அக்கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ராமாயண நடிகர் அருண் கோவில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத், சந்தேஷ்காலி வன்முறையில் இருந்து தப்பிய ரேகா பத்ரா, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போதைய எம்.பி.க்களான வருண் காந்தி, வி.கே.சிங், அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு … Read more

‘அரசியலமைப்பு சட்டம்’ பற்றி பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமாருக்கு சீட் இல்லை!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேவுக்கு சீட் வழங்காமல், வேட்பாளரை மாற்றிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி பாஜக எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி செய்திகளில் அடிபடுவார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் 6 முறை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என பேசியுள்ளார். இவர் அண்மையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை … Read more

கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சர்ச்சை கருத்து: சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் பாஜக-வுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அவரது சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கனா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. அதேபோன்று, குஜராத் காங்கிரஸ் நிர்வாகி எச்.எஸ்.அஹிர் எக்ஸ் பக்கத்தில் கங்கனா குறித்து ஒரு கமென்ட் வெளியானது. இதில் சுப்ரியா ஸ்ரீநேத்தின் பதிவை உடனடியாக … Read more