விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

மொகாலி, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  தற்போது இப்போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு  பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த போட்டி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இன்று நடைபெற்ற  ஆட்டத்தில் ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின.போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். அந்த அணியின் பீட்டர் ஹார்ட்லி  போட்டியின் 28-வது … Read more

பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை; உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவிப்பு

மலேசியா, உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.   இதனால் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷிய அணி கால்பந்து தொடர்களில் பங்கேற்க பிபா கூட்டமைப்பு ஏற்கனவே தடை செய்துள்ளது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷியா … Read more

2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து

தெலுங்கானா,   உலக பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் பி.வி.சிந்து. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். இந்த நிலையில் பாட்மிண்டன் துறையில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக தெலுங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்  சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்  விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!

புதுடெல்லி, 10 அணிகள் கொண்ட 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.  இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. ஈஸ்ட் பெங்கால்  அணி விளையாடிய 18 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,10 தோல்வி என புள்ளி … Read more

பாலியல் தொல்லை குறித்து புகார்: வீராங்கனையிடம் பாலினம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி

சென்னை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் சர்வதேச அளவில் 12க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சக பயிற்சியாளர் பாலின ரீதியாக தொந்தரவு செய்ததாக  காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விசாரணையின்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர், சாந்தியிடம் பாலினம் குறித்து பேசியதாக … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க வீரர் கெய்ல் வேரின்னே அதிரடி சதம்

கிறிஸ்ட்சர்ச், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அந்த அணி 364 … Read more

தேசிய அளவிலான கார்பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை, கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று 2-ம் சுற்று போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. … Read more