ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற  ஆட்டத்தில் ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின.போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.
அந்த அணியின் பீட்டர் ஹார்ட்லி  போட்டியின் 28-வது நிமிடத்தில் அந்த அணியின் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து டேனியல் சீமா மற்றும் ரஹ்மான் தலா ஒரு கோல் அடிக்க 3-0 என்ற கணக்கில்  ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.