பாலியல் தொல்லை குறித்து புகார்: வீராங்கனையிடம் பாலினம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி

சென்னை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் சர்வதேச அளவில்
12க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சக பயிற்சியாளர் பாலின ரீதியாக தொந்தரவு செய்ததாக  காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், விசாரணையின்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர், சாந்தியிடம் பாலினம் குறித்து பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தேசிய மாற்றுப் பாலின ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புகாரின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவ்வாறு கேள்வி கேட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.