மோடி இருந்தால் நான் போக மாட்டேன்! ஒரு மாற்றம் வேண்டும் – சுப்பிரமணிய சுவாமி!
பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க கூப்பிட்டால் வருவேன் கூப்பிட வில்லை என்றால் வரமாட்டேன்; தமிழ்நாடு என் சொந்த ஊர் மதுரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க கூப்பிட்டால் வருவேன் கூப்பிட வில்லை என்றால் வரமாட்டேன்; தமிழ்நாடு என் சொந்த ஊர் மதுரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்தமாற்றுத் திறனாளியான மணி வண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 7 கோடி மாற்றுத் திறனாளிகள்: நாடு முழுவதும் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் கல்வி மற்றும் … Read more
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரைகளை குறிப்புகளுடன் கூடிய உறைகளில் இட்டு வழங்கும் நடைமுறை வரவேற்பை பெற்றுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவம், கண் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, எலும்பு மருத்துவம், குழந்தைகள் நலன், தோல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு, தருமபுரி மாவட்டம் மட்டுமன்றி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இருந்தும் … Read more
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்களவை தேர்தலில் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தருமபுரி மக்களவை தொகுதியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (மார்ச் 23) இரவு தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: உசிலம்பட்டி தொகுதி மக்கள் கடந்த 2019 எம்பி தேர்தலிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஏமாற்றிவீட்டீர்கள். இந்தமுறையும் உசிலம்பட்டி மக்கள் எங்களை (திமுகவை) ஏமாற்றுவீர்களா? உசிலம்பட்டி மக்களை நம்ப முடியவில்லை. அப்படி எங்களை ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்துபோவீர்கள். காலையிலிருந்து ராமநாதபுரம், … Read more
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசுத்துறை நிர்வாகங்கள் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரினடையே சுணக்கம் காணப்படுகிறது. இதனால் தேர்தல் களம் களைகட்டவில்லை. திருநெல்வேலியில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கா.ப. கார்த்திகேயன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளுக்கு வரமுடியாத நிலையிலுள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று … Read more
திருவாரூர்: “காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு – காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜக பாணி சர்வாதிகாரம். இந்த நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படலாம். ஏன், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை தொனியில் பேசினார். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலியையும், … Read more
TN Congress Candidates List 2024: மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மேட்டூர்: “பாமக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுதான் வருகிறது. காலையில் அதிமுக கட்சியுடனும், மாலையில் பாஜக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இது கொள்கை கூட்டணி அல்ல. பேரம் பேசி கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்” என வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேட்டூர் அடுத்த நவப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி தலைமை தாங்கினார். … Read more
சென்னை: மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 தொகுதிகள் பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. இதில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக … Read more