மீண்டும் நீட் விலக்கு மசோதா – இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

சென்னை:
தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 
அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிபரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.