கோவையில் கடை உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் பறித்த பெண்.. விடாமல் விரட்டிச் சென்று கொள்ளைக்காரியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.!  <!– கோவையில் கடை உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் … –>

கோவையில் கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் வந்து பெண் உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் பறித்த பெண்ணை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரத்தினபுரி பகுதியில் சண்முகா கிப்ட் ஆர்ட்டிகல்ஸ் என்ற கடையை நடத்தி வருபவர் செல்வராணி. வெள்ளிக்கிழமை மதியம் இவரது கடைக்கு வந்த பெண்,பரிசுப் பொருளை வாங்கி, அவற்றை பேக்கிங் செய்து தருமாறு கேட்டார்.

செல்வராணி பொருட்களை பேக்கிங் செய்தபோது, அந்த பெண், திடீரென ஸ்ப்ரே ஒன்றை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்து அவரது கழுத்தில் இருந்த ஏழரை சவரன் நகையைப் பறித்தார்.

தப்பி ஓட முயன்ற பெண்ணை தடுத்து செல்வராணி போராடிய நிலையில், அவரை தள்ளிவிட்டு அந்த பெண் தப்பி ஓடினார். துரத்திக் கொண்டே ஓடிய செல்வராணி, மக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தார். விசாரணையில் அந்தக் கொள்ளைக்காரி மதுரையைச் சேர்ந்த தவமணி என்பது தெரியவந்தது.

 

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.