சுபகிருது பஞ்சாங்கம் வெளியீடு| Dinamalar

திருநள்ளாறு:காரைக்கால், திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.
மாநில செயலர் சுவாமிநாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு, கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.விழாவில் சங்க பொறுப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். மகாலிங்க சிவாச்சாரியார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திலீப்குமாரசிவம், மகாராஜாசிவம் செய்திருந்தனர்.முன்னதாக விக்னேஸ்வரபூஜை, பஞ்சாங்க பூஜை, 27 நட்சத்திரம், 12 ராசிகளுக்கான அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாரானை காட்டப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.