முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்



ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்றது.

இதில் கடந்த 14 வருடங்களாக விளையாடிய 3 நட்சத்திர வீரர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அமித் மிஸ்ரா

2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார்.
அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, 2022ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இவரை ஒரு அணியும் தனது அணியில் இணைப்பதற்கு முன்வரவில்லை. 

பீயுஸ் சாவ்லா

ஐபிஎல் தொடரில் 165 போட்டிகளில் பங்கேற்று 155 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் பீயுஸ் சாவ்லா.
அப்படிப்பட்ட இவர் 2022 ஐபிஎல் ஏலத்தில் எந்த ஒரு அணிக்காகவும் தேர்வு செய்யப்படவில்லை. 

சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணாக இருந்தவர் ரெய்னா என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படி இருந்த சுரேஷ் ரெய்னாவை 2022 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிக்கும் தேர்வு செய்யப்படவில்லை.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.