வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் என்றே தெரியாமல் குழம்பிய மக்கள் <!– வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் எ… –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் என்றே தெரியாமல் போனதாகக் கூறி குறிப்பிட்ட பகுதி மக்கள் தேர்தல் அலுவலகத்தில் முறையிட்டனர்.

15 வார்டுகளைக் கொண்ட பட்டணம் பேரூராட்சி 6வது வார்டில் திமுக, அதிமுக சார்பில் 2 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், அதிமுக வேட்பாளர் மணியரசி வாபஸ் பெற்றதால் திமுகவைச் சேர்ந்த பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பேரூராட்சியில் 130 பேர் வசிக்கும் கே.வி.கே காலனி உள்ளது. முந்தைய தேர்தல்களில் 4வது வார்டில் வாக்களித்து வந்த இந்த 130 பேரின் பெயர்களும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வார்டு வரையறையின்போது 5வது மற்றும் 6வது வார்டுகளில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அறியாத அந்த மக்கள், தங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு கேட்டு வராததால் குழப்பமடைந்துள்ளனர். விசாரித்தபோது, அவர்களது வார்டில் திமுகவைச் சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.