உக்ரைனிலிருந்து 242 இந்தியர்கள் நாடு திரும்பினர்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உக்ரைனில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா மூன்று விமானங்களை இயக்கி வருகிறது. வரும் 26ம் தேதி வரை விமான சேவை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் உக்ரைனிலிருந்து 242 இந்தியர்கள் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார்.
மேலும் இந்தியர்கள் போயிங் 787 விமானம் மூலம் உக்ரைனின் கிவிவ் நகரிலிருந்தும் புறப்பட்டு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.