முல்லைத்தீவில் முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2,746 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கையும் 984 ஏக்கர் நிலப்பரப்பில் வேறு பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயிர்ச் செய்கைக்கு எதிர்வரும் முதலாம் திகதி குளத்தின் நீர் திறந்துவிடப்படும் என்றும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் நீர் விநியோக காலப்பகுதியாக இருக்கும் என்றும் குறித்த காலப்பகுதியில் விவசாயிகள் தங்களுடைய பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.