வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் <!– வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க…. –>

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க மாநில அரசு அமைத்த சிறப்புக் குழுவிற்கு தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 193 தமிழக மாணவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்ப வசதி செய்துதரப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாக்கியாவிற்கு 1,000-க்கும் தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்து நாடு திரும்ப காத்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய, எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுவினர் அந்த நாடுகளுக்கு சென்று தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.