சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு… ஆட்சியை பிடிக்கப் போவது யார்?

மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைககு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது

அதில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காங்போக்பி, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், மீதமுள்ள 22 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!

இந்த தேர்தலில 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்காளர்களின் வசதிக்காக மொத்தம் 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 10 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.