சூடு, சுரணை, மானம், சுயமரியாதை இருந்தால் அவரை கேள்வி கேள்., மேயர் விவகாரத்தில் திமுகவினரை வெளுத்து வாங்கிய பெண்ணியவாதி.!

சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா ராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது, ‘அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், பெண்ணியவாதி சாதிக்கு எதிரான மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது என்னது’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக உடன்பிறப்புகள் பல்வேறு பதில்களை தெரிவித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மரியா லாரன்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக உடன் பிறப்புகள் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அது பெரும் பரபரப்பையும், திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அவரின் அந்த பதிவில், “மேயர் என்கிற பதவி எவ்வளவு பெரியது. அத்தகைய பதவியில் இருக்கும் ஒருவரை பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது அவருக்கு பேச தெரியாதது போல் பதில் சொல்லி தரும் அமைச்சர் சேகர் பாபு , அவர்கள் முன்னிலையில் “குழந்தையிடம் இப்படியா கேள்வி கேட்பார்கள்” என்று அவமதிக்கிறார்.

சூடு சுரணை மானம் சுயமரியாதை இருந்தால் அவரை கேள்வி கேட்காமல், அதை எடுத்து சொன்ன என்னை இழிவு செய்கிறார்கள் திமுக காரர்கள். இந்த அயோக்கிய த்ணதிற்கு என்ன பெயர் வைப்பது?

நான் பெண்ணியவாதி என்பதால் தான் எனக்கு இந்த இழிவு தவறாக தெரிகிறது. அரசியலுக்கு வரும் பெண்களை சுயமாக இயங்க விடதாக ஆணாதிக்க புத்தி உங்களுக்கு தவறாக தெரியவில்லை என்றால் உங்களுக்கு பெண்ணியம் பற்றிய பாடம் தேவை” என்று காட்டமாக மரியா தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.