உபி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்… 5 மாநில தேர்தல் திருவிழா இன்று முடிவுக்கு வருகிறது: ஆட்சியை பிடிப்பது யார்? என 10ம் தேதி தெரியும் ..

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, உபி.யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் 2 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது. இங்கு பதிவான வாக்குகள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், உ.பியில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி, அசம்கர், ஜான்பூர், காஜிப்பூர், சந்தோலி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம், இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.