கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? தோப்புக்கு நடுவே ரகசிய “ஸ்கேன் மையம்”!

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்துக்கு நடுவே குடிசை வீட்டில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்துகொள்வதும் தெரியப்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டியில் வயல்வெளிக்கு நடுவே சிறிய வீடு ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த பரிசோதனை நடைபெறுவதாக சென்னையிலுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள், சுகுமார், வேடியப்பன் என இருவரை கைது செய்தனர். ஒரு ஸ்கேனுக்குத் தலா 8 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் வசூல் செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் எவ்வித உறுத்தலுமின்றி அதிகாரிகளுடன் சேர்ந்து மதிய உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். இதில் சுகுமார் ஏற்கனவே இதே குற்றத்துக்காக 4 முறை கைது செய்யப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.