கோகுல்ராஜ் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி யுவராஜ் வேறு சிறைக்கு மாற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்த யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 8ம் தேதி யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 10பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
image
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யூவராஜ் மதுரை மத்திய சிறையிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.