கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.!

கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்வோருக்கான கட்டணம் 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் அல்லாதவர்களுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

குழு மாதிரிகளுக்கான கட்டணமும் 150 ரூபாயிலிருந்து பாதியாக குறைக்கப்பட்டு, 75 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.