மதுபோதை சாலையின் குறுக்கே படுத்திருந்த நபர் மீது கார் ஏறி, இறங்கிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் கொல்லம் அருகே மதுபோதை தலைக்கேறி சாலையின் குறுக்கே படுத்திருந்த நபர் மீது, அடுத்தடுத்து 2கார்கள் ஏறி இறங்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பரணிக்காவு பகுதியைச் சேர்ந்த நிசாம் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு, தள்ளாடிய நிலையில் கடை வாசலில் நின்றுக் கொண்டிருந்துள்ளார்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு இடையூறாக அவர் நின்றிருந்ததால், மதுக்கடை ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

மதுபோதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்று தெரியாத நிசாம், சாலையின் குறுக்கே சென்று படுத்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நிசாம் மீது ஏறி இறங்கியது. பின்னால் வந்த பிற வாகனங்களும் ஏறிய நிலையில், நிசாம் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.