10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. காவல்துறை தீவிர விசாரணை..!

10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் உடையார் பாளையம் பகுதியில் 16 வயது மாணவி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்டுறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையின் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.