"ஓரம்போ ஓரம்போ.. கத்காரி வண்டி வருது".. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கார்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயு கார் என்ற பெருமையைப் பெற்றுள்ள காரில் பயணித்து இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர்
நிதின் கத்காரி
.

இதுதான் இந்தியாவின் எதிர்காலம் என்றும் அந்தக் காரைப் புகழ்ந்துள்ளார் கத்காரி. முற்றிலும் ஹைட்ரஜன் எரிவாயுவை எரிபொருளாகக் கொண்ட இந்தக் காரில் தனது வீட்டிலிருந்து
நாடாளுமன்றம்
வரை பயணித்தார் கத்காரி. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயு கார் இதுதான்.

இதுகுறித்து கத்காரி கூறுகையில், இதுதான் இனி எதிர்காலம். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இந்தியா சுயசார்பை எட்டும் வகையிலான நடவடிக்கைகளில் இது முக்கியமானது. பெட்ரோல், டீசலால் மாசு ஏற்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் கார்களால் எந்த மாசும் ஏற்படுவதில்லை.

3 வகையான ஹைட்ரஜன் கார்கள் உள்ளன. இது கிரீன் ஹைட்ரஜன் காராகும். கிரீன் ஹைட்ரஜன் எரிவாயுவின் விலை கிலோமீட்டருக்கு 1. 5 ரூபாய் ஆகும். இதை ஜப்பானில் மிராய் என்று சொல்வார்கள். இந்த எரிபொருள் இந்தியாவை சுயசார்புடைய நாடாக மாற்ற உதவும் என்றார் அவர்.

இந்த மாதத் தொடக்கத்தில்தான் இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட எலக்ட்ரிக் வாகனமான “டொயோட்டா மிராய்” வாகனத்தை கத்காரி அறிமுகப்படுத்தி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

அடுத்த செய்திசென்னையில் 2வது விமான நிலையம் – மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.