திடீரென பற்றி எரிந்த கார்.. திருநெல்வேலி சாலையில் பரபரப்பு..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், ஆவரை குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான காரில் வள்ளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்று கொண்டிருக்கும் போது அவரின் காரின் எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த அவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார், அந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது, தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.