தொடர்ந்து 4-வது நாளாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.!

திருச்செந்தூர் கடல் கடந்த 3 நாட்களாக உள்வாங்கிய நிலையில், இன்று நான்காவது நாளாக உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருச்செந்தூர் கடல் நீர் லேசாக உள்வாங்குவதும், அமாவாசை முடிந்ததும் இயல்புநிலை திரும்புவது வழக்கமாக உள்ளது.

ஆனால், இந்த மாத அமாவாசைக்கு முன்பே ஒரு நாளும் அதன் பிறகு இரண்டு நாளும் என மூன்று நாட்கள் திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது. இதனையடுத்து அமாவாசை முடிந்த பிறகு இன்றும் கடல் உள்வாங்கி இருப்பது திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கடல் நீர் சுமார் 200 அடி வரை உள்வாங்கி உள்ளதால் கடலில் உள்ள பாறைகள் வெளியே நன்றாக தெரிகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.