தமிழகத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களைப் பற்றி சிந்திக்காமல் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஏதும் சொல்லவில்லை என்றும் மத்திய அரசு மீது தமிழக அரசு வீண்பழி போடுவதாகவும் கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.