26 பாக்கெட்டுகள்… 46 கிலோ – ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி கைது

மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார்   பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர்  திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கஞ்சா

மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பைகள் அருகே அமர்ந்திருந்த திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 25)  அவர் மனைவி சத்யா (வயது 20), சரபேஸ்வரர் (வயது 19) ஆகியோரை போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, போலீஸார் அவர்களை மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மூவரும் 23 பாக்கெட்டுகளில் ரூ.10 லட்சம் மதிப்புடைய 46 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

கஞ்சா

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மூவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் மேல்விசாரணைக்காக தஞ்சாவூர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.