கதிர் பேச்சை கேட்காத கயல் பாப்பா… அதுக்காக இப்படியா மிரட்டுரது?

Tamil Serial Update : விஜய் டிவியின் வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சகோத ஒற்றுமை, கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வறு விஷயங்கள எடுத்துக்கூடும் இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், ஹேமா, காவியா அறிவுமணி, குமரன், சரவணவிக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகினறனர். டிஆர்பி ரேட்டிங்கில் மு்னனணியில் இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இதில் மூர்த்தி தனம் தம்பதிக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே ஜீவா மீனா தம்பதிக்கு கயல் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அடுத்து முல்லைக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று வெயிட் பண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதனால் சீரியல் பரபரப்பான திருப்பங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்து வெளியானா வீடியோ வைரலாக பரவி வருகிறது

பொதுவாக சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகினறனர். அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் குமரன், கயல் கேரக்டரில் நடித்து வரும் குழந்தையிடம் கதிர் என்று சொல்ல சொல்லிக்கொடுக்கிறார்.

ஆனால் குழந்தை கவனிக்காமல், ஹாயாக வேடிக்கை பார்த்தக்கொண்டே ஏதோ சொல்கிறது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும்இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஹார்டின் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.