“தென்னிந்திய சினிமா பற்றி நான் சொல்லியதாக பரவிவரும் தகவல் பொய்யானது" -ராஷி கண்ணா மறுப்பு!

ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் ஹிந்தி படங்களில் நடிப்பதால் தமிழ், தெலுங்கில் இருந்து வரும் வாய்ப்பை ஏற்க மறுப்பதாகவும் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வெறும் முகஅழகுக்காக மட்டும்தான் பார்க்கிறார்கள், பொம்மை/ மில்கி என்பது போல விமர்சிக்கிறார்கள் என்று அவர் சொன்னதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ராஷி கண்ணாவைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

ராஷி கண்ணா பதிவு

அதில், “சில பொய்யாக உருவாக்கப்பட்ட, தவறாக சித்தரிக்கப்பட்ட தகவல்கள், நான் தென்னிந்திய படங்களைப் பற்றி சொன்னதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நான் பணிவாகக் கேட்கிறேன். இதை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் படம் நடிக்கிற ஒவ்வொரு மொழியின் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அன்பாக நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவிக்கிறார். நாக சைதன்யா உடன் நடிக்கும் ‘Thank you’ படம், கோபிசந்த் உடன் ‘பக்கா கமர்சியல்’, சித்தார்த் மல்கோத்ரா உடன் ஹிந்தியில் ஒரு படம் என அவர் நடித்துள்ள படங்கள் தயாராகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.